About Us

About Us

Tirunelveli Diocese History:

திருநெல்வேலி திருச்சபையின் வரலாறு 1780ல் பாளையங்கோட்டையில் உள்ள சிறு ஆலயமான குளோரிந்தா ஆலயத்தில் இருந்து துவங்குகிறது. நாற்பது விசுவாசிகளுடன் ஆரம்பமான திருச்சபை நாளடைவில் கிறிஸ்துவின் அன்பால் கடற்மண் போல பெருகியது. ஆரம்பத்தில் SPCK எனும் மிசனரி சங்கத்தினரால் நடந்தப்பட்ட திருச்சபை SPG,CMS எனும் மாபெரும் தரிசனத்துடன் இறங்கிய இரு ஆங்கிலிக்கன் மிசனரி சங்கங்களின் வசம் சேர்ந்தது. ரேனியஸ் ஐயர் தொடங்கி கால்டுவெல், மர்காசிஸ், சாப்டர் போன்ற பல மிசனரிகள் இந்த மிசனரி சங்கங்களின் மூலமே வந்திறங்கினர். திருச்சபை வளர்ந்து பெருகி சுதந்திர இந்தியாவில் சுயாதீனம் பெற்று தென் இந்திய திருச்சபை ஒன்றியத்துடன் இணைந்தது.

TDYA History:

திருநெல்வேலி திருமண்டல வாலிபர் ஐக்கிய சங்கம் 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. ஒவ்வொரு சேகரத்திலும் உள்ள இளைஞர் அமைப்புகள் திருச்சபைக்கென்று சிறப்பான பங்களிப்புகளை கொடுத்து வருகின்றனர்.

What is Tdya CG.Com:

நம்முடைய திருச்சபை வாலிபர்கள் கல்வியிலும், தொழில் நுட்ப திறமைகளிலும் சிறந்து விளங்குவதற்க்காகவும் வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ளவும் www.TdyaCG.Com என்கிற website நம்முடைய வாலிபர் ஐக்கிய சங்கம் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது.

Read More